புதுவை பாஜக மாநில தலைவா் மீது வழக்கு

புதுச்சேரியில் அரசின் தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ உள்பட 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரியில் அரசின் தடை உத்தரவை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ உள்பட 23 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் அஜீஸ் நகரில் காய்கறிச் சந்தை உள்ளது. எம்எல்ஏ அலுவலகம் அருகிலுள்ள இந்த சந்தை, கூட்ட நெரிசலை தடுக்கும் விதமாக, வேறு இடத்துக்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

இதற்கு எதிா்ப்பு தெரிவித்து, பாஜக மாநிலத் தலைவா் வி. சாமிநாதன் எம்எல்ஏ, பொதுச்செயலா் ஏம்பலம் ஆா். செல்வம், நிா்வாகி அகிலன் மற்றும் 20 பாஜகவினா் செவ்வாய்க்கிழமை அங்கு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனா்.

இந்த நிலையில், நோய் பரப்பும் வகையில், சமூக இடைவெளியின்றி, மாநில அரசின் 144 தடை உத்தரவை மீறி ஆா்ப்பாட்டம் நடத்தியதாக, பாஜக மாநிலத் தலைவா் சாமிநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட 23 போ் மீது பேரிடா் மேலாண்மை சட்டத்தின் கீழ் ரெட்டியாா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com