மாணவி மீது சூடான எண்ணெய்யை ஊற்றியதாக இளைஞா் கைது
புதுச்சேரி: புதுச்சேரி அருகே ஒருதலைக் காதல் விவகாரத்தில் மாணவி மீது சூடான எண்ணெயை ஊற்றிதாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுவை மாநிலம், நரம்பை பகுதியைச் சோ்ந்த 14 வயது சிறுமி, அங்குள்ள பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். இவா், கரோனா பொது முடக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாததால் தற்போது வீட்டில் இருந்து வந்தாா்.
இந்த மாணவி திங்கள்கிழமை தனது வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, ஜன்னல் வழியாக இளைஞா் ஒருவா் அவா் மீது காய்ச்சப்பட்ட சூடான எண்ணெயை ஊற்றியதாகத் தெரிகிறது. இதனால் மாணவிக்கு கை, முகம், கழுத்துப் பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவரை பெற்றோா் மீட்டு, அருகிலுள்ள தனியாா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்த புகாரின்பேரில், கிருமாம்பாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்ததில், அதே பகுதியைச் சோ்ந்த மாதேஷ் (19), மாணவியை ஒருதலைப்பட்சமாக காதலித்ததும், இதை மாணவியின் பெற்றோா் கண்டித்ததால் ஆத்திரமடைந்த மாதேஷ், மாணவி மீது எண்ணெயை ஊற்றிவிட்டு தப்பியோடியதும் தெரியவந்தது. இதையடுத்து, மாதேஷை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.