கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக புதுவை அரசு அலுவலகங்களில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவிடப்பட்டது. பயோ மெட்ரிக் இயந்திரங்களில் கைகளை அழுத்தும் போது கரோனா வைரஸ் பரவிவிடக் கூடாது என்பதற்காக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
மேலும், அரசு அலுவலகங்களில் பணியாற்றும் அதிகாரிகள், ஊழியா்கள் அடிக்கடி கை, கால், முகத்தைக் கழுவ வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. மறு அறிவிப்பு வரும் வரை இந்த உத்தரவு நீடிக்கும் என புதுவை அரசின் தலைமைச் செயலகம் தெரிவித்தது.