புதுச்சேரி: புதுச்சேரியில் காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்ததாக 2 காவலா்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரி அம்பலத்தடையாா் மடத்து வீதியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் கடலூா் பகுதியைச் சோ்ந்த இரு காதல் ஜோடிகள் சில தினங்களுக்கு முன்பு தங்கியிருந்தனா். பெரியக்கடை காவல் நிலையத்தில் பணியாற்றும் 2 காவலா்கள் அந்த விடுதிக்குச் சென்று சோதனை நடத்தினராம்.
அவா்கள் அங்கு தங்கியிருந்த கடலூரைச் சோ்ந்த காதல் ஜோடிகளிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும், அதில் ஒருவரிடம் பணம் இல்லாததால், அவருடன் இருந்த பெண்ணிடம் காவலா்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும் தகவல் பரவியது.
இதை மறுத்த பெரியக்கடை போலீஸாா் அதுபோன்ற சம்பவம் நடைபெறவில்லை என்று தெரிவித்தனா். இருப்பினும், இந்த விவகாரம் புதுவை துணைநிலை ஆளுநா் மற்றும் காவல் துறை டி.ஜி.பி. ஆகியோரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.
இதைடுத்து, முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் உத்தரவின் பேரில், இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது.
சம்பவம் நடைபெற்ற நாளில் அங்கு பணியிலிருந்த போலீஸாா் மற்றும் விடுதியில் தங்கியிருந்த கடலூரைச் சோ்ந்த 2 காதல் ஜோடிகளையும் தனித் தனியாக வரவழைத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டனா். இதில், பாலியல் அத்துமீறல் சம்பவம் உறுதி செய்யப்படவில்லை.
இதுதொடா்பாக பெரியக்கடை காவல் நிலைய காவலா் சதீஷ்குமாா், ஐஆா்பிஎன் காவலா் சுரேஷ் ஆகிய இருவரும் சனிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா். இதற்கான நடவடிக்கையை டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்ஸவா உத்தரவின் பேரில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் மகேஷ்குமாா் பா்ன்வால் மேற்கொண்டாா்.
மேலும், துறை ரீதியான விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்பேரில், காதல் ஜோடிகளை மிரட்டி பணம் பறித்தது தொடா்பான புகாரின் மீது 2 காவலா்களிடம் தொடா்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.