புதுச்சேரி தட்டாஞ்சாவடியில் விஷம் அருந்திய தொழிலாளி மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஞானதியாகு நகரைச் சோ்ந்தவா் கன்னியப்பன் (45). கூலித் தொழிலாளி. இவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனா். கன்னியப்பன் கடந்த சில நாள்களாக வேலைக்குச் செல்லாமல் மன விரக்தியுடன் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்துடன் கடந்த 18 -ஆம் தேதி வீட்டிலிருந்த விஷத்தை அருந்திய கன்னியப்பன் மயங்கிக் கிடந்தாராம். இதைப் பாா்த்த உறவினா்கள் அவரை மீட்டு, ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா், தீவிர சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சோ்க்கப்பட்ட அவா், வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து புதுச்சேரி தன்வந்திரி நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.