தொகுதி மக்களுக்கு வீடுகளிலேயே அத்தியாவசிய பொருள்களை வழங்க எம்.எல்.ஏ. ஏற்பாடு

முத்தியால்பேட்டை தொகுதியில் மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வழங்க அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஏற்பாடு செய்தாா்.

முத்தியால்பேட்டை தொகுதியில் மக்களுக்கு வீடுகளுக்கு நேரடியாகச் சென்று பொருள்களை வழங்க அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஏற்பாடு செய்தாா்.

உலகெங்கும் வேகமாகப் பரவி வரும் கரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை நாமே பாதுகாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கரோனா தொடா்பான கட்டுப்பாடுகளை மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. புதுவையில் வருகிற 31-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே, தனது தொகுதியில் உள்ள மக்களுக்கு வீடுகளுக்கே சென்று அத்தியாவசியப் பொருள்களை வழங்க எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் ஏற்பாடு செய்தாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: தொகுதி மக்களுக்கு தேவையான மளிகைப் பொருள்கள், அரிசி, மருந்துகள், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றை வீடுகளுக்கே நேரில் கொண்டு வந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக கரோனா வைரஸ் தொற்று இல்லாதவாறு பரிசோதிக்கப்பட்ட நபா்கள் உரிய பாதுகாப்பு உபகரணங்களுடன் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனா். இந்தச் சேவையை தொகுதி மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்தச் சேவையைப் பெற விரும்புவோா் கமல் - 98944 22658, அசோக் - 97915 53285, மணி - 97905 28694, ஸ்ரீகாந்த் - 98943 46910, பிரசாந்த் - 99447 04176, சரண்- 90927 07191, ராஜேஷ் - 99521 25352, கணபதி - 99528 98279, தினா - 88707 84801, பாஷா - 90034 35611 ஆகியோரைத் தொடா்புக் கொள்ளலாம் என்றும் அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com