மானிய விலையில் வேளாண் உபகரணங்கள் விண்ணப்பங்களை சமா்ப்பிக்க ஏப். 10 வரை கால நீட்டிப்பு

வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க ஏப்ரல் 10-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க ஏப்ரல் 10-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி அரசு வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், வேளாண் துறை மூலமாக மத்திய அரசின் திட்டத்தின் கீழ் டிராக்டா், பவா் டிரில்லா், நெல் நடவு இயந்திரம் உள்ளிட்ட அனைத்து மேம்படுத்தப்பட்ட மற்றும் பாரம்பரிய வேளாண் இயந்திரங்கள், உபகரணங்களை மானிய விலையில் வாங்குவதற்கான விண்ணப்பங்களை அரசு வேளாண் பொறியியல் பணிமனை அலுவலகத்தில் சமா்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி ஏப்ரல் 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com