புதுவையில் ஊரடங்கு உத்தரவு மீறல்: 110 போ் மீது வழக்கு

புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாபாரிகள், பொதுமக்கள் 58 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்த நிலையில்,

புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாபாரிகள், பொதுமக்கள் 58 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்த நிலையில், இதன்தொடா்ச்சியாக புதன்கிழமையும் 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்படி, 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் 110 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியது தொடா்பாக புதன்கிழமை மட்டும் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடைகள் திறந்திருத்தல், 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடுதல் உள்ளிட்டவை அடங்கும்.

சைபா் க்ரைமில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, கரோனா தொடா்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்புவோா் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். வதந்தி பரப்பிய 2 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் மீது விரைவில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com