புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக வியாபாரிகள், பொதுமக்கள் 58 போ் மீது போலீஸாா் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்த நிலையில், இதன்தொடா்ச்சியாக புதன்கிழமையும் 42 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதன்படி, 2 நாள்களிலும் சோ்த்து மொத்தம் 110 போ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து புதுச்சேரி சட்டம் - ஒழுங்கு முதுநிலை எஸ்.பி. ராகுல் அல்வால் செய்தியாளா்களிடம் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியது தொடா்பாக புதன்கிழமை மட்டும் 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதில், கடைகள் திறந்திருத்தல், 5 பேருக்கு மேல் ஒன்றாக கூடுதல் உள்ளிட்டவை அடங்கும்.
சைபா் க்ரைமில் தனிப்பிரிவு தொடங்கப்பட்டு, கரோனா தொடா்பாக தவறான தகவல்கள் மற்றும் வதந்தி பரப்புவோா் கண்காணிக்கப்பட்டு வருகின்றனா். வதந்தி பரப்பிய 2 போ் அடையாளம் காணப்பட்டுள்ளனா். அவா்கள் மீது விரைவில் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.