புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக 2,919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,951 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து புதுவை பேரிடா் மேலாண்மைத் துறைச் செயலா் அருண் கூறியதாவது: புதுவை மாநிலத்தில் ஊரடங்கை மீறியதாக 2,919 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 15,951 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. மேலும், 1,263 போ் கைது செய்யப்பட்டுள்ளனா். வியாழக்கிழமை மட்டும் 34 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 18 போ் கைது செய்யப்பட்டனா். 41 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்றாா் அவா்.