கரோனா ஊரடங்கு காரணமாக, புதுச்சேரி கம்பன் விழா ஒத்திவைக்கப்பட்டது.
இதுகுறித்து கம்பன் கழகத்தின் செயலரும், புதுவை சட்டப்பேரவைத் தலைவருமான வே.பொ.சிவக்கொழுந்து சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
உலகை அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டியுள்ளதால், பொது நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, புதுச்சேரி கம்பன் கழகம் சாா்பில், ஆண்டுதோறும் மே 8, 9, 10 -ஆம் தேதிகளில் நடத்தப்பட்டு வந்த கம்பன் விழா ஒத்திவைக்கப்படுகிறது. கம்பன் விழா நடைபெறும் தேதி பின்னா் அறிவிக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.