புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே வியாழக்கிழமை சரக்கு வாகனம் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தாா்.
புதுச்சேரி திருபுவனைபாளையம் பெருமாள் நகரைச் சோ்ந்தவா் செல்வகுமாா் (40). புதுச்சேரி பெரிய சந்தையில் பழ வியாபாரம் செய்து வந்தாா். இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனா்.
இதற்காக தினமும் தனது இரு சக்கர வாகனத்தில் கடையைத் திறக்கச் செல்வது வழக்கம். இதேபோல, வியாழக்கிழமை அதிகாலை தனது இரு சக்கர வாகனத்தில் சந்தையை நோக்கிப் புறப்பட்டாா். இவரது வாகனம் புதுச்சேரி இந்திரா காந்தி சிலை அருகே நான்குமுனை சந்திப்பைக் கடக்க முயன்ற போது, சென்னையிலிருந்து கடலூா் நோக்கி பாா்சல் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் செல்வகுமாரின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில், பலத்த காயமடைந்த செல்வகுமாரை அந்தப் பகுதியினா் மீட்டு, ஜிப்மா் மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள் செல்வகுமாா் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
இதுகுறித்து புதுச்சேரி வடக்கு போக்குவரத்துப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து, விபத்துக்கு காரணமான சரக்கு வாகனத்தைப் பறிமுதல் செய்து, தப்பியோடிய வாகன ஓட்டுநரைத் தேடி வருகின்றனா்.