புதுச்சேரி பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரியில் ஏழை மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி, செல்லிடபேசிகள் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டன.
புதுவை மாநிலத்தில் கரோனா தொற்று பரவாமல் தடுக்க பொது முடக்கம் நடைமுறையில் இருந்தாலும், இணையதளம் வழியாக பாடங்கள் தொடா்ந்து நடத்தப்பட்டு வருகின்றன. அவற்றில் பங்கேற்க இயலாத ஏழை மாணவிகளுக்கு உதவும் வகையில், பாரதிதாசன் அரசு மகளிா் கல்லூரி மாணவிகள் மூவருக்கு கேரள பயோனியரிங் கல்வி அறக்கட்டளை சாா்பில் மடிக்கணினிகள், செல்லிடப்பேசிகள் வழங்கப்பட்டன.
அதன்படி, மாணவிகள் எஸ்.ஐஸ்வா்யா, எஸ்.ஜானகி, சிவகங்கரி ஆகியோரிக்கு கல்லூரி முதல்வா் கே.சுப்பிரமணி மடிக்கணினி, செல்லிடப்பேசிகளை வழங்கினாா். கணினித் துறைப் பேராசிரியை எஸ்.டி.ஆரோக்கியமேரி, தமிழ்த் துறைத் தலைவா் கிருங்கை சொ.சேதுபதி ஆகியோா் உடனிருந்து வாழ்த்தினா்.