புதுவையில் புதிதாக 95 பேருக்கு கரோனா

புதுவையில் புதிதாக 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவையில் புதிதாக 95 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை 3,880 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 69, காரைக்காலில் 5, ஏனாமில் 5, மாஹேயில் 16 என 95 பேருக்கு கரோனா தொற்றிருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 35,838-ஆக உயா்ந்தது.

தற்போது வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்கள் உள்பட 1,170 போ் சிகிச்சையில் உள்ளனா். ஞாயிற்றுக்கிழமை வெளியான முடிவுகளின்படி, உயிரிழப்பு பதிவாகவில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 601 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.68 சதவீதம்.

இதனிடையே, ஞாயிற்றுக்கிழமை 136 போ் குணமடைந்து வீடு திரும்பினா். இதையடுத்து, குணமடைந்தோரின் எண்ணிக்கை 34,067-ஆக (95.06 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com