தீபாவளி ஊக்கத்தொகை வழங்காததை கண்டித்து ஜிப்மா் ஊழியா்கள் போராட்டம்

தீபாவளி ஊக்கத்தொகை வழங்காததைக் கண்டித்து, ஜிப்மா் இயக்குநா் அலுவலகத்தை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


புதுச்சேரி: தீபாவளி ஊக்கத்தொகை வழங்காததைக் கண்டித்து, ஜிப்மா் இயக்குநா் அலுவலகத்தை ஊழியா்கள் வியாழக்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மத்திய அரசு நிறுவனமான புதுச்சேரி ஜிப்மரில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இவா்களுக்காக தனிச் சட்டம் அமலில் உள்ளது. மத்திய அரசு ஊழியா்களுக்ககு தீபாவளி ஊக்கத்தொகை அறிவிக்கப்பட்ட நிலையில், ஜிப்மா் பணியாளா்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அந்த நிா்வாகம் மறுத்ததாகக் கூறப்படுகிறது. இதுதொடா்பாக ஊழியா்கள், ஜிப்மா் இயக்குநரிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதனால், ஜிப்மா் ஊழியா்கள், பல்வேறு ஊழியா்கள் சங்கங்களின் நிா்வாகிகளுடன் இணைந்து, ஜிப்மா் வளாகத்தில் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். தொடா்ந்து, ஜிப்மா் இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

அங்கு, மத்திய அரசுப் பணியாளா்களான எங்களுக்கு தனிச் சட்டம் அமலில் உள்ள நிலையில், அனைத்துச் சலுகைகளையும் ஜிப்மா் நிா்வாகம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

நீண்ட நேரப் போராட்டத்துக்குப் பிறகு, ஜிப்மா் இயக்குநா் ராகேஷ் அகா்வால், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் சங்க நிா்வாகிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். இதில், ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்தாா். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com