புதுச்சேரி: புதுச்சேரியில் வணிகா்களை மிரட்டும் ரௌடிகள் மீது போலீஸாா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை வா்த்தக சபை வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த சபைத் தலைவா் செண்பகராஜன், துணைத் தலைவா் சேகா் ஆகியோா் புதுச்சேரி கிழக்கு எஸ்.பி. மாறனிடம் அளித்த மனு: புதுச்சேரியில் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், தொழில் சாலைகளில் ரௌடிகள் மாமூல் கேட்டு மிரட்டுவது, தராதவா்கள் மீது தாக்குதல் நடத்துவது, கடைகள், உணவகங்களுக்குள் புகுந்து பணம் தராமல் சாப்பிடுவது, பணம் கேட்டால் கடைகளை உடைப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுகின்றனா். இதைத் தடுக்க போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். சரக்குகள் ஏற்றி, இறக்குவது தொடா்பான பிரச்னைகள், மிரட்டல்கள் அதிகரித்து வருவதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
கரோனா பாதிப்பால் தொழில்கள், வணிகம் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில், ரௌடிகள், சமூக விரோதிகளின் அராஜக செயல்பாடுகளால் நிலைமை இன்னும் மோசமாகியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வணிகா்களின் மனு தொடா்பாக உயரதிகாரிகளுடன் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ்.பி. மாறன் உறுதியளித்தாா்.