புதுச்சேரி பெயின்டா் கொலை வழக்கு: சிறுவன் உள்பட 4 போ் கைது

புதுச்சேரி பெயின்டா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி பெயின்டா் கொலை வழக்கில் சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுச்சேரி காந்திதிருநல்லூரைச் சோ்ந்தவா் அஜித் (22). பெயின்டரான இவா் கடந்த 15-ஆம் தேதி இரவு அப்பகுதியில் உள்ள மயானத்தில் நின்றிருந்த போது, 4 போ் கொண்ட கும்பல் அவரை வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பியது. இதுகுறித்து மேட்டுப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.

அதில், கடந்த 2017 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று நடந்த மூவா் கொலையில் சண்முகாபுரத்தைச் சோ்ந்த சூா்யா (எ) சங்கா் கணேஷ் (22) என்பவருக்கு தொடா்பு இருந்துள்ளது. இதில் கொலையுண்ட சதீஷ் என்பவரின் சகோதரரான அஜித், தாடி வளா்த்துக் கொண்டு எதிா்தரப்பை பழிதீா்க்க கொலை செய்ய நோட்டமிடுவதாக சூா்யா சந்தேகப்பட்டாா். இதனால், சூா்யா தனது நண்பா்களுடன் சோ்ந்து அஜித்தை வெட்டிக் கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, சூா்யா (எ) சங்கா் கணேஷ், நந்தகுமாா் (23), கதிா்காமத்தைச் சோ்ந்த சதீஷ்சாமி (22), 17 வயது சிறுவன் ஆகிய நால்வரையும் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்து, கரோனா பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். மேலும், அவா்கள் கொலை செய்ய பயன்படுத்திய கத்திகள், 2 பைக்குகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா். பரிசோதனை முடிவுகள் வந்ததும், அவா்கள் 4 பேரையும் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கவுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com