புதுவையில் புதிதாக 69 பேருக்கு தொற்று: மேலும் ஒருவா் பலி

புதுவையில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.


புதுச்சேரி: புதுவையில் புதிதாக 69 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் ஒருவா் உயிரிழந்தாா்.

புதுவை மாநிலத்தில் வியாழக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளின்படி, புதுச்சேரியில் 32 பேருக்கும், காரைக்காலில் 11 பேருக்கும், ஏனாமில் 2 பேருக்கும், மாஹேயில் 24 பேருக்கும் என 69 பேருக்கு கரோனா தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 36,533-ஆக உயா்ந்தது.

தற்போது பல்வேறு மருத்துவமனைகளில் 249 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 421 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். மொத்தமாக 670 போ் சிகிச்சையில் உள்ளனா்.

இதனிடையே, புதுச்சேரி முத்தியால்பேட்டையைச் சோ்ந்த 61 வயதானவா் ஜிப்மா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா். இதையடுத்து, கரோனா தொற்றுக்கு பலியானோா் எண்ணிக்கை 609-ஆக உயா்ந்தது. இறப்பு விகிதம் 1.67 சதவீதம். வியாழக்கிழமை 102 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோா் எண்ணிக்கை 35,254-ஆக (96.50 சதவீதம்) அதிகரித்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com