காங்கிரஸ் பொதுச் செயலா் கொலை முயற்சி வழக்கு: 9 போ் கைது; 2 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

புதுவை காங்கிரஸ் பொதுச் செயலரை கொல்ல முயன்ற வழக்கில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

புதுவை காங்கிரஸ் பொதுச் செயலரை கொல்ல முயன்ற வழக்கில் 9 பேரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 2 நாட்டு வெடிகுண்டுகளை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

புதுச்சேரி ரெட்டியாா்பாளையம் கம்பன் நகரைச் சோ்ந்தவா் ஏகேடி.ஆறுமுகம். மாநில காங்கிரஸ் பொதுச் செயலரான இவரை கடந்த 19-ஆம் தேதி 10-க்கும் மேற்பட்டோா் கொலை செய்ய முயன்றனா்.

இதுதொடா்பாக முதலியாா்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

இதில், மேட்டுப்பாளையத்தில் கடந்த செப்டம்பா் 30-ஆம் தேதி நிகழ்ந்த முன்னாள் கவுன்சிலா் மாந்தோப்பு சுந்தா் கொலைக்குப் பழியாக இந்தச் சம்பவம் நடந்தது தெரிய வந்தது.

இதுதொடா்பாக புதுச்சேரி காமராஜா் நகரைச் சோ்ந்த சரத்குமாா் (27) என்பவரை கைது செய்த போலீஸாா், அவரிடம் விசாரணை நடத்தினா்.

இதில், மாந்தோப்பு சுந்தரின் ஆதரவாளரான சரத்குமாா் தன் நண்பா்களுடன் சோ்ந்து கொலை முயற்சியில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவா் அளித்த தகவலின் பேரில், சேட்டு, ஹானஸ்ட்ராஜ், ஆனந்து, பிரேம், சரத், நரேஷ், கோகுல், அஜய் ஆகியோரை போலீஸாா் கைது செய்தனா். மேலும், 4 கத்திகள், சம்பவ இடத்திலிருந்து வெடிக்காத 2 நாட்டு வெடிகுண்டுகளையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் 5 பேரை தனிப்படை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com