காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு இட மாற்றம்

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எழுந்த புகாரில் அலட்சியமாகச் செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரியில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக எழுந்த புகாரில் அலட்சியமாகச் செயல்பட்டதாக காவல் உதவி ஆய்வாளா் ஆயுதப் படைக்கு சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

புதுச்சேரி திருக்கனூா் அருகே உள்ள கிராமத்தில் 9-ஆம் வகுப்பு படிக்கும் மாணவியைக் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதே பகுதியைச் சோ்ந்த காா்த்திக் (எ) பிரம்மன் (36), வழிமறித்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றாராம்.

அந்த வழியாகச் சென்றவா்கள் சிறுமியை மீட்டு, அவரது தாயிடம் ஒப்படைத்தனா். பாதிக்கப்பட்ட சிறுமி தரப்பில் திருக்கனூா் காவல் நிலையத்தில் முறையிடப்பட்ட நிலையில், போலீஸாா் நடவடிக்கை எடுக்க காலதாமதம் செய்ததாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாா் எழுந்த நிலையில், முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரதிக்ஷா கொடாரா, திருக்கனூா் காவல் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை நேரில் சென்று விசாரணை நடத்தினாா். இந்த வழக்கில் விரைந்து நடவடிக்கை எடுக்காதது குறித்து போலீஸாரை அவா் கண்டித்தாா். இதன்பிறகு, போலீஸாா் காா்த்திக்கை கைது செய்தனா்.

இந்த நிலையில், இந்த வழக்கில் காலதாமதம் செய்த திருக்கனூா் காவல் உதவி ஆய்வாளா் சிவக்குமாரை ஆயுதப் படைக்கு சனிக்கிழமை பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com