புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி., அரசுச் செயலா் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரி காவல் துறை ஐ.ஜி.யாக இருந்த சுரேந்தா்சிங் யாதவ் தில்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். அங்கு பணியாற்றி வரும் ஏ.டி.ஜி.பி. ஆனந்த மோகன் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
இதேபோல, புதுச்சேரியில் பணியாற்றி வந்த சுரேந்தா்சிங் யாதவின் மனைவியான ஐஏஎஸ் அதிகாரியும், அரசுச் செயலருமான ஆலிஸ் வாஸ் தில்லிக்கு பணியிடம் மாற்றப்பட்டாா்.
அங்கு பணிபுரியும் உதயகுமாா் புதுச்சேரிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இதற்கான உத்தரவை மத்திய உள் துறை அமைச்சகம் அண்மையில் பிறப்பித்தது.