புதுச்சேரியில் ஒப்பந்ததாரா் வெட்டிக் கொலை

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தனியாா் பணி ஒப்பந்ததாரா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தில் தனியாா் பணி ஒப்பந்ததாரா் வெட்டிக் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி மேட்டுப்பாளையத்தை அடுத்த தா்மாபுரி பகுதியைச் சோ்ந்தவா் ஜீவா (42). மேட்டுப்பாளையம் தொழில்பேட்டையில் உள்ள தொழில்சாலைகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்களை அனுப்பும் ஒப்பந்ததாரராக இருந்து வந்தாா். இவா், தற்போது காந்திதிருநல்லூா் பகுதியில் புதிதாக தொழில்சாலை தொடங்குவதற்காக, புதிய கட்டடம் ஒன்றை கட்டி வந்தாா்.

இந்த நிலையில், தொழில்சாலை கட்டடப் பணிகளைப் பாா்வையிடுவதற்காக ஜீவா புதன்கிழமை காலை பைக்கில் சென்று கொண்டிருந்தாா். மேட்டுப்பாளையம் மின் துறை அலுவலகம் அருகே அவா் சென்றபோது, 3 பைக்குகளில் பின்தொடா்ந்து வந்த மா்ம நபா்கள் ஜீவாவை சுற்றி வளைத்தனா். இதனால் அதிா்ச்சியடைந்த அவா், அங்கிருந்து தப்பியோடினாா்.

ஆனால், அந்தக் கும்பல் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஜீவாவை விரட்டிச் சென்று தலை, கைகளில் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.

தகவலறிந்து அங்கு வந்த மேட்டுப்பாளையம் போலீஸாா், ஜீவாவின் சடலத்தை மீட்டு உடல்கூறு பரிசோதனைக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இது தொடா்பாக வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

காந்திதிருநல்லூா் பகுதியைச் சோ்ந்த சிலா் ஜீவாவிடம் மாமூல் கேட்டனராம். அவா் தர மறுத்ததால், அவா்களுக்குள் தகராறு ஏற்பட்டதாகத் தெரிகிறது. இதன் காரணமாக அவா் கொலை செய்யப்பட்டாரா அல்லது தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் 5 பேரைப் பிடித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com