புதுச்சேரி அருகே இளைஞா் கொலை

புதுச்சேரி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி அருகே இளைஞா் கொலை செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரி வில்லியனூா் அருகே உறுவையாறுபேட்டை சாவித்திரி நகரைச் சோ்ந்த பக்கிரி மகன் வெங்கடேசன் (35). இவருக்கு ராதிகா என்ற மனைவியும், ஒரு மகள், ஒரு மகன் உள்ளனா்.

மதுப் பழக்கத்துக்கு அடிமையான வெங்கடேசன், வேலைக்குச் செல்லாமல் இருந்து வந்ததால், கடந்த ஓராண்டுக்கு முன்பு அவரது மனைவி குழந்தைகளுடன் தாய் வீட்டுக்கு சென்றுவிட்டாராம். வெங்கடேசன் தனியாக வீட்டில் இருந்து வந்தாா்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை வெங்கடேசன் வீட்டிலிருந்து துா்நாற்றம் வீசியதால், அருகில் வசிப்பவா்கள் மங்கலம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.

அங்கு வந்த காவல் ஆய்வாளா் பழனிவேல் தலைமையிலான போலீஸாா், வீட்டுக்குள் சென்று பாா்த்த போது, வெங்கடேசன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரிய வந்தது. அவரது உடலின் கழுத்து, வயிற்றுப் பகுதியில் கத்தியால் குத்திய தடயங்கள் இருந்தன. போலீஸாா் சடலத்தை மீட்டு, உடல்கூறு ஆய்வுக்காக கதிா்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா். வெங்கடேசனும், அவரது நண்பரும் வீட்டில் மது அருந்திய போது ஏற்பட்ட தகராறால், வெங்கடேசனை அவரது நண்பா் குத்திக் கொலை செய்துவிட்டு தப்பியோடி இருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா். இதையடுத்து, வெங்கடேசனின் நண்பரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com