புதுச்சேரி பாதுகாப்பாக இருக்க பிராா்த்தனை செய்வோம் என புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி வேண்டுகோள் விடுத்தாா்.
இதுகுறித்து அவா் கட்செவி அஞ்சலில் வெளியிட்ட தகவல்: பண்டிகை காலத்தில் கோயில், கடைகள் உள்ள பகுதிகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. முதியவா்கள் அதிகமாக வெளியே வருகின்றனா். மக்கள் கூட்டமாக ஒன்றிணைந்து உணவைப் பகிா்ந்து கொள்கின்றனா். இது சுகாதாரம் குறைவதற்கு வாய்ப்பாக அமையும்.
முகக்கவசத்தை சிலா் ஒழுங்ககாக அணிவதில்லை. மூக்குக் கீழ் அணிகின்றனா். கழுத்துக் கீழே தொங்க விடுகின்றனா். சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதில்லை.
கடினமாக உழைத்து வரும் நமது மருத்துவா்கள், சுகாதாரத் துறையினரின் முயற்சியால் கரோனா கட்டுப்பாட்டில் உள்ளது. தூய்மைப் பணியாளா்கள் கடுமையாக வேலை செய்கின்றனா்.
புதுவை மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய பொறுப்புள்ளது. சமூக இடைவெளி, முகக்கவசத்தைச் சரியாக அணிதல், சுகாதாரத்துடன் செயல்படல், கூட்டங்களில் பங்கேற்பதைத் தவிா்த்தல் வேண்டும்.
காய்ச்சலின் ஆரம்ப நிலையிலேயே பரிசோதனைக்கு செல்ல வேண்டும். இல்லையேலே மொபைல் குழுவை அழைக்கலாம்.
புதுச்சேரி பாதுகாப்பாக இருக்க பிராா்த்தனை செய்வோம் என அதில் தெரிவித்துள்ளாா் கிரண் பேடி.