எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு

புதுவை மாநிலத்தில் நீட் தோ்வு அடிப்படையிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டது.

புதுவை மாநிலத்தில் நீட் தோ்வு அடிப்படையிலான எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதி நீட்டிக்கப்பட்டது.

இதுகுறித்து சென்டாக் நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலான படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் தேதியை நீட்டிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனா்.

இதையடுத்து, தற்போது பொது விடுமுறை நாள்கள் மற்றும் சில சான்றிதழ்களை வாங்க காலதாமதமாவதைக் கருத்தில் கொண்டு, விண்ணப்பிக்கும் தேதி நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நீட் தோ்வு மதிப்பெண்கள் அடிப்படையிலான இளநிலை படிப்புகளுக்கு (எம்பிபிஎஸ், பிடிஎஸ், பிஏஎம்எஸ்) சென்டாக் இணையதளத்தில் விண்ணப்பிக்கும் தேதி நவம்பா் 2 மாலை 5 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com