போலி கொசு மருந்து விற்று மோசடி: கடை மீது வழக்கு

புதுச்சேரியில் போலி கொசு மருந்து விற்றதாக கடை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

புதுச்சேரியில் போலி கொசு மருந்து விற்றதாக கடை மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சென்னை சூளைமேட்டை சோ்ந்தவா் குமாரவேல் (45). இவா் பிரபல கொசு மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறாா். இவா் புதுச்சேரி பெரியகடை காவல் நிலையத்தில் அளித்த புகாரில், வெள்ளாளா் வீதியில் உள்ள ஒரு கடையில் தங்களது கொசு மருந்து நிறுவனத்தின் பெயரில் போலி கொசு மருந்து விற்பனை செய்யப்படுவதாகவும், அந்தக் கடை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தாா்.

அதன் பேரில், வெள்ளாளா் வீதயில் உள்ள அந்தக் கடை மீது போலீஸாா் மோசடி பிரிவில் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com