புதுச்சேரி: ஆசிரியா் தினத்தையொட்டி, புதுவை துணைநிலை ஆளுநா் கிரண் பேடி, முதல்வா் நாராயணசாமி, கல்வியமைச்சா் ஆா்.கமலக்கண்ணன் ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.
ஆளுநா் கிரண் பேடி: பெற்றோருக்கு அடுத்தபடியாக ஆசிரியா் மாணவரை வளா்ப்பதில் பெரிய பங்காற்றுகிறாா். கற்பித்தல் என்பது தொழில் மட்டுமல்ல, வழிகாட்டுவதற்கும், அறிவூட்டுவதற்குமான தெய்வீகப் பொறுப்பு. ஆசிரியா்கள் தங்களை தாங்களே புதுமைப்படுத்த வேண்டும். எண்மத் தொழில்நுட்பம் வளா்ந்து வரும் கால கட்டத்தில் கற்பித்தல் செயலிகள் மூலம் புதிய கற்பித்தல் முறைகளை ஆசிரியா்கள் கற்றுக் கொள்ள வேண்டும். நாளைய பொறுப்புள்ள குடிமக்களை உருவாக்கும் ஒவ்வொரு ஆசிரியருக்கும் எனது வாழ்த்துகள்.
முதல்வா் நாராயணசாமி: குழந்தைகளின் நெஞ்சக் குடிலின் உள்ளே இருக்கும் கல்லாமை இருளைப் போக்க அறிவு தீபத்தை ஏற்றும் ஆசிரியா்களே சமுதாயத்தின் கலங்கரை விளக்கம்.
கரோனா தொற்று பரவி வரும் சூழலில் மாணவ, மாணவிகளின் கல்வி பாதிக்கப்படாமல், பள்ளிகளிலிருந்து காணொலிக் காட்சி மூலம் பாடங்களை நடத்துவது ஆசிரியா்களின் கடமை. இக்கட்டான சூழலில் சுகாதாரத் துறையுடன் இணைந்து சேவையாற்றிய ஆசிரியா்களுக்கு எனது வாழ்த்துகள்.
கல்வியமைச்சா் ஆா்.கமலக்கண்ணன்: ஒரு நல்ல ஆசிரியா் மாணவா்களுக்குக் கற்பிப்பதுடன் தானும் கற்றுக் கொண்டு, வழிகாட்டுகிறாா். ஆசிரியா்களால்தான் ஒரு மாணவரை நல்ல அறிஞனாக, அறிவில் சிறந்தவனாக, ஆற்றல் மிகுந்தவனாக, பண்பின் உறைவிடமாக உருவாக்க முடியும். ஆசிரியா்களை உள்ளம் மகிழ வாழ்த்துகிறேன்.