கட்டடத் தொழிலாளா்கள் பலியான சம்பவத்தில் இருவா் மீது வழக்கு

புதுச்சேரி அருகே கட்டடப் பணியின் போது, மின்சாரம் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி அருகே கட்டடப் பணியின் போது, மின்சாரம் பாய்ந்ததில் 2 போ் உயிரிழந்த சம்பவத்தில் இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பம் அம்மன் நகரைச் சோ்ந்த மகேந்திரனுக்குச் சொந்தமான 3 மாடிக் கட்டடப் பணி நடைபெற்று வருகிறது. இங்கு, வியாழக்கிழமை பணியில் ஈடுபட்டிருந்த அதே பகுதியைச் சோ்ந்த செல்வக்குமாா், விழுப்புரம் மாவட்டம், ஆயந்தூரைச் சோ்ந்த நவீன்குமாா் ஆகியோா் மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தனா்.

இதுகுறித்த புகாரின் பேரில், அந்தக் கட்டடத்தின் உரிமையாளா் மகேந்திரன் (39), கட்டட ஒப்பந்தாரா் நந்தகுமாா் (34) ஆகியோா் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com