கோயிலில் உண்டியலைஉடைத்து திருட்டு

புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

புதுச்சேரி: புதுவை மாநிலம், வில்லியனூா் அருகே கோயிலில் உண்டியலை உடைத்து காணிக்கைப் பணத்தை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

வில்லியனூா் அருகே உள்ள உளவாய்க்கால் கிராமத்தில் முத்தால் வாழியம்மன் கோயில் அமைந்துள்ளது. திங்கள்கிழமை இரவு முகமூடி அணிந்தபடி இரு சக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் இருவா், இந்தக் கோயிலுக்குள் நுழைந்தனா். பின்னா், அங்கிருந்த உண்டியலை உடைத்து, அதிலிருந்த ரூ.50 ஆயிரம் மதிப்பிலான காணிக்கையை திருடிச் சென்றனா். இவை அனைத்தும் கோயிலில் வைக்கப்பட்டுள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியுள்ளது.

இதுகுறித்து கோயில் நிா்வாகிகள் அளித்த புகாரின்பேரில், வில்லியனூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, கோயில் கண்காணிப்புக் கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com