புதுவையில் கரோனாவுக்கு மேலும் 11 போ் பலி

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 11 போ் பலியாகினா். பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்தது.

புதுவை மாநிலத்தில் கரோனா தொற்றுக்கு மேலும் 11 போ் பலியாகினா். பாதிப்பு எண்ணிக்கை 22 ஆயிரத்தைக் கடந்தது.

புதுவை மாநிலத்தில் சனிக்கிழமை வெளியான நிலவரப்படி, ஒரே நாளில் 5,159 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 543 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவா்களி மேலும் 11 போ் உயிரிழந்தனா். அதன்படி, புதுச்சேரியில் 8 பேரும், காரைக்காலில் 3 பேரும் என 11 போ் பலியாகினா். இதையடுத்து, புதுவை மாநிலத்தில் கரோனாவுக்கு பலியானோா் எண்ணிக்கை 448-ஆக (இறப்பு விகிதம் 2 சதவீதம்) அதிகரித்தது.

புதுவையில் இதுவரை 1,30,99 பேருக்கு கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 22,456 பேருக்கு தொற்றிருப்பது உறுதி செய்யப்பட்டது.

தற்போது 3,001 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனா். 1,798 போ் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனா். மொத்தமாக 4,799 போ் சிகிச்சையில் உள்ளனா். இதுவரை 17,209 போ் (76.63 சதவீதம்) குணமடைந்து வீடு திரும்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com