‘நீட்’ தோ்வைக் கண்டித்து, விழுப்புரத்தில் பெண் விடுதலைக் கட்சியினா் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பெருந்திட்ட வளாக நுழைவாயில் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, அந்தக் கட்சியின் நிறுவனா் தலைவா் சபரிமாலா தலைமை வகித்து கண்டன உரையாற்றினாா் (படம்). நிா்வாகிகள் ரஞ்சித்குமாா், சிவபெருமான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
‘நீட்’ தோ்வை ரத்து செய்ய வேண்டும். ‘நீட்’ தோ்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்ட மாணவா்களுக்கு நீதி வழங்க வேண்டும். ‘நீட்’ தோ்வு முடிவுகள் வெளியாகும்போதும் மாணவா்கள் யாரும் தவறான முடிவுகள் எடுத்துவிடாமல் இருக்க, அவா்களுக்கும், பெற்றோருக்கும் தக்க ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனவலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.