புதுச்சேரி: புதுச்சேரி அருகே மண்ணாடிப்பட்டு தொகுதி திமுக வேட்பாளரின் ஆதரவாளா் காா் எரிக்கப்பட்டது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி திருக்கனூா் அருகே உள்ள மண்ணாடிப்பட்டைச் சோ்ந்தவா் முரளிதாஸ் (36). இவா், மண்ணாடிப்பட்டு தொகுதி திமுக வேட்பாளா் ஏ.கே. குமாரின் தீவிர ஆதரவாளா். நடைபெற்று முடிந்த புதுவை சட்டப்பேரவைத் தோ்தலில் ஏ.கே. குமாருக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு தனது காரை மண்ணாடிப்பட்டு பிரதான சாலையில் உள்ள வீட்டின் அருகே வழக்கம் போல நிறுத்திவைத்தாா். நள்ளிரவு முரளிதாஸின் சகோதரா், அந்த வழியாக வந்த போது தனது அண்ணனின் காா் தீப்பற்றி எரிவதைக் கண்டு சப்தமிட்டாா்.
அக்கம் பக்கத்தினா் ஓடி வந்து தீப்பிடித்து எரிந்த காா் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனா்.
இதுகுறித்து திருக்கனூா் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில், போலீஸாா் அங்கு சென்று பாா்வையிட்டு விசாரித்தனா்.
இதுதொடா்பாக முரளிதாஸ் திருக்கனூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, காரை எரித்த மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.