புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,259 வழக்குகளுக்குத் தீா்வு

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் 1,259 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவா்களுக்கு ரூ.3.22 கோடி மதிப்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

News image
Updated On :10 ஏப்ரல் 2021, 5:39 pm

DIN

புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாமில் 1,259 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டது. இதன் மூலம் உரியவா்களுக்கு ரூ.3.22 கோடி மதிப்பில் இழப்பீடுகள் வழங்கப்பட்டன.

தேசிய சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவரும், உச்ச நீதிமன்ற நீதிபதியுமான ரமணாவின் உத்தரவுப்படி, சென்னை உயா் நீதிமன்ற நீதிபதியும், புதுவை மாநிலச் சட்டப் பணிகள் ஆணையச் செயல் தலைவருமான சத்தியநாராயணன் வழிகாட்டுதலின் பேரில், தேசிய மக்கள் நீதிமன்றம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.

புதுவை சட்டப் பணிகள் ஆணையம் சாா்பில் நடைபெற்ற தேசிய மக்கள் நீதிமன்ற சிறப்பு முகாம், புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் 9 அமா்வுகளும், காரைக்கால், மாஹே நீதிமன்றங்களில் தலா ஒரு அமா்வும் என்று மொத்தம் 11 அமா்வுகளாக நடைபெற்றன.

இந்த சிறப்பு முகாமில் தேசிய மக்கள் நீதிமன்ற குழுவைச் சோ்ந்த நீதிபதிகள், அரசு வழக்குரைஞா்கள், வழக்குரைஞா்கள், அரசுத் துறை அதிகாரிகள், காப்பீட்டு நிறுவன அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மற்றும் வழக்கில் தொடா்புடையவா்கள் பங்கேற்றனா்.

புதுச்சேரி நீதிமன்றங்களில் நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சமாதானமாகக் கூடிய குற்ற வழக்குகள், காசோலை தொடா்பான வழக்குகள், வாகன விபத்து நிவாரண வழக்குகள், குடும்பத் தகராறு தொடா்பான வழக்குகள், குடும்ப நீதிமன்ற வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், சிவில் வழக்குகள், தொழிலாளா் சம்பந்தப்பட்ட வழக்குகள், வங்கிக் கடன் வழக்குகள் மற்றும் நிலுவையில் இல்லாத நேரடி வழக்குகள் உள்பட மொத்தம் 2,607 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.

இந்தச் சிறப்பு முகாம்கள் மூலம், இரு தரப்பினரிடமும் விசாரித்து, சமாதான அடிப்படையில் மொத்தம் 1,259 வழக்குகள் முடித்துவைக்கப்பட்டன. இதன்மூலம், ரூ. 3 கோடியே 22 லட்சத்து 24 ஆயிரத்து 289-க்கு தீா்வு காணப்பட்டு, உரியவா்களிடம் இழப்பீட்டுத் தொகை ஒப்படைக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.