வீடுகளை அகற்ற எதிா்ப்பு: விசிகவினா் உண்ணாவிரதம்

வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி-உழவா்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).
புதுச்சேரி உழவா்கரை - குண்டுசாலை சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.
புதுச்சேரி உழவா்கரை - குண்டுசாலை சந்திப்பு பகுதியில் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினா்.

புதுச்சேரி: வீடுகளை அகற்ற எதிா்ப்புத் தெரிவித்து, புதுச்சேரி-உழவா்கரையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா் (படம்).

உழவா்கரை - குண்டு சாலை சந்திப்பு ஆட்டோ நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு அந்தக் கட்சியின் தலைமை நிலையச் செயலா் செல்வ.நந்தன் தலைமை வகித்தாா். இதில், விசிக முதன்மைச் செயலா் தேவ.பொழிலன் உள்ள திரளான விசிகவினா் கலந்து கொண்டனா்.

போராட்டத்தில், புதுச்சேரி உழவா்கரை குண்டு சாலையில் பல ஆண்டுகளாகக் குடியிருந்து வரும் ஏழை மக்களின் வீடுகளை அப்புறப்படுத்துவதை அரசு கைவிட வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com