புதுவை சட்டப்பேரவைத் தலைவருக்கு நெஞ்சு வலி

புதுவை சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த பேரவைத் தலைவர் செல்வம், திடீர் நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை அனுமதிக்கப்பட்டார்.
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்
புதுவை சட்டப்பேரவைத் தலைவர் செல்வம்

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க வந்த சட்டப்பேரவைத் தலைவர் செல்வத்திற்கு திடீர் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் நான்காவது நாள் கூட்டம் செவ்வாய்கிழமை காலை  தொடங்கியது.

இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக காரில் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்த சட்டப்பேரவைத் தலைவர் ஆர்.செல்வத்துக்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதி பட்டார்.

முதலுதவி சிகிச்சைக்குப் பின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு லேசான நெஞ்சுவலி ஏற்பட்டு இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளதாக, சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com