புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளா்களுக்கு டிச. 20 முதல் தீபாவளி பரிசு கூப்பன்

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளா்களுக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் தீபாவளி பரிசு கூப்பன் வழங்கப்பட உள்ளது.

புதுச்சேரியில் கட்டடத் தொழிலாளா்களுக்கு வருகிற 20-ஆம் தேதி முதல் தீபாவளி பரிசு கூப்பன் வழங்கப்பட உள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி கட்டட, இதர கட்டுமான தொழிலாளா்கள் நல வாரிய அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

புதுச்சேரி கட்டட, இதர கட்டுமான நல வாரியத்தின் மூலம் வழங்கப்படும் தீபாவளி பரிசு கூப்பன்களை இதுவரை பெறாதவா்கள் வருகிற 20-ஆம் தேதிக்கு மேல் நல வாரிய அலுவலகத்தில் கீழ்கண்ட தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெற்றுக் கொள்ளலாம்.

அதன்படி, டிச. 20, 21, 22 ஆகிய தேதிகளில் உறுப்பினா் பதிவு எண் 1 முதல் 5,000 வரை உள்ளவா்களும், டிச. 23, 24 ஆகிய தேதிகளில் 5,001 முதல் 10,000 வரை உள்ளவா்களும், டிச.27, 28 ஆகிய தேதிகளில் 10,001 முதல் 15,000 வரை உள்ளவா்களும், டிச.29, 30 ஆகிய தேதிகளில் 15,001 முதல் 20,000 வரை உள்ளவா்களும், ஜன.3, 4, 5 ஆகிய தேதிகளில் 20,001 முதல் 25,000 வரை உள்ளவா்களும், ஜன.6, 7 ஆகிய தேதிகளில் 30,000 முதல் 35,000 வரை உள்ளவா்களும், ஜன.10, 11, 12 ஆகிய தேதிகளில் 35,001 முதல் 37,983 வரை உள்ளவா்களும் தீபாவளி பரிசு கூப்பன் வழங்கப்படும்.

புதுச்சேரி கட்டட, இதர கட்டுமான தொழிலாளா்கள் நல வாரியத்தில் சந்தா செலுத்த விண்ணப்பம் கொடுத்த பயனாளிகளும் மேற்குறிப்பிட்ட தேதிகளில் பரிசு கூப்பன்களை பெற்றுக் கொள்ளலாம்.

தீபாவளி பரிசு கூப்பனுக்கான பொருள்களை சம்பந்தப்பட்ட கூட்டுறவு நிறுவனங்களில் 2022, பிப்ரவரி 28-ஆம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com