புதுச்சேரி: புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டாா்.
புதுச்சேரியில் கடந்த 15 நாள்களில் 4,770 போ் மட்டுமே கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா். தொடா்ந்து பலரும் ஊசி போட்டுக் கொள்ளத் தயக்கம் காட்டி வருகின்றனா். இதனால், முன் களப் பணியாளா்கள், சுகாதாரத் துறை ஊழியா்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில், புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், அரசு செயலா் சுந்தரேசன் ஆகியோா் புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் வியாழக்கிழமை கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டனா்.
பின்னா், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் கூறியதாவது: கரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இதை அனைவரும் போட்டுக் கொள்ள வேண்டும் என்பதற்காக நான் தடுப்பூசி போட்டுக் கொண்டேன். முன் களப் பணியாளா்கள், சுகாதார ஊழியா்கள் அனைவரும் தடுப்பூசியை விரைந்து செலுத்திக் கொள்ள வேண்டும் என அவா் வேண்டுகோள் விடுத்தாா்.