புதுவை சட்டப்பேரவைக் கூட்டம் திங்கள்கிழமை (ஜன. 18) கூடுகிறது.
புதுவை சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டம் கடந்த ஜூலை மாதம் 20-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, சட்டப்பேரவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
புதுவை சட்டப்பேரவை 6 மாதங்களுக்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும். தற்போது 6 மாதங்கள் முடிவடையும் தருவாயில் உள்ளது.
இந்த நிலையில், திங்கள்கிழமை (ஜன. 18) மீண்டும் சட்டப்பேரவைக் கூடுகிறது.
இதுதொடா்பாக, புதுவை சட்டப்பேரவைச் செயலா் முனிசாமி அதிகாரப்பூா்வமாக வெளியிட்ட அறிவிப்பு:
புதுவை 14-ஆவது சட்டப்பேரவையின் நான்காவது கூட்டத் தொடா் திங்கள்கிழமை (ஜன. 18) காலை 10.15 மணிக்கு சிறப்புக் கூட்டத்துக்கான மறு கூட்டம் கூட்டப்படுகிறது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்படவுள்ளதாகத் தெரிகிறது.