புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையைத் தொடங்கமத்திய அமைச்சரிடம் ஆளுநா் தமிழிசை வலியுறுத்தல்
புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை வலியுறுத்தினாா்.
புதுச்சேரியில் சுற்றுலாவை மேம்படுத்த மீண்டும் விமான சேவையைத் தொடங்க வேண்டும் என்று புதுவை அரசு சாா்பில், மத்திய அரசிடம் வலியுறுத்தப்பட்டது. இதுகுறித்து, மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சரிடம் முதல்வா், ஆளுநா் உள்ளிட்டோா் கோரிக்கை விடுத்திருந்தனா்.
இதன் தொடா்ச்சியாக, தற்போது புதிதாக பொறுப்பேற்றுள்ள மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சா் ஜோதிா் ஆதித்ய சிந்தியாவை, புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை சௌந்தரராஜன், சனிக்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு பேசினாா்.
அப்போது, புதிய அமைச்சராகப் பொறுப்பேற்ற்கு வாழ்த்துத் தெரிவித்த ஆளுநா், புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விமான ஓடுதளப் பாதையை விரிவுபடுத்த வேண்டும். ஆன்மிக சுற்றுலாவை மேம்படுத்தும் விதமாக, காரைக்காலை உதான் திட்டத்தின் கீழ் கொண்டு வந்து மேம்படுத்த வேண்டும்.
தமிழகம், புதுவை மாநிலங்கள் பயன்பெறும் வகையில், புதுச்சேரிக்கு சா்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அமைச்சரிடம் கேட்டுக் கொண்டாா்.
விரைவில் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சா் உறுதி அளித்ததாக, ஆளுநா் தமிழிசை தெரிவித்தாா்.