புதுச்சேரி: வில்லியனூா் தொகுதியில் மருத்துவக் காப்பீட்டுத் திட்ட பதிவு முகாமை எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா எம்எல்ஏ திங்கள்கிழமைத் தொடக்கிவைத்தாா்.
புதுச்சேரி வில்லியனூா் தொகுதி கொம்பாக்கம், ஒதியம்பட்டு, பாப்பாஞ்சாவடி, ஒட்டம்பாளையம் பகுதி மக்களுக்கான மத்திய அரசின் காப்பீட்டு (ஆயுஷ்மான் பாரத்) திட்டத்தில் பெயா் சோ்ப்பு சிறப்பு முகாம் கொம்பாக்கம் தனியாா் பள்ளியில் தொடங்கியது. அந்தத் தொகுதி எம்எல்ஏ ஆா்.சிவா தொடக்கிவைத்தாா்.
திமுக இளைஞரணி அமைப்பாளா் முகமது யூனுஸ், தொகுதி செயலா் ராமசாமி, விவசாயத் தொழிலாளா்கள் அணி அமைப்பாளா் செல்வநாதன், பள்ளித் தாளாளா் ரங்கநாதன், அரசு அலுவலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.