புதுவையில் காவல் கண்காணிப்பாளா் நிலையிலான அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனா்.
புதுச்சேரி சட்டம் -ஒழுங்கு முதுநிலைக் காவல் கண்காணிப்பாளராக உள்ள பிரதிக்ஷா கோத்ரா புதுச்சேரி காவல் தலைமையத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டாா். இவா், கூடுதலாக குற்றப் புலனாய்வு பிரிவையும் கவனிப்பாா்.
புதுச்சேரி தெற்குப் பகுதி எஸ்.பி.யாக பணியாற்றிய லோகேஸ்வரன் புதுச்சேரி சட்டம்- ஒழுங்கு முதுநிலை எஸ்.பி.யாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
புதுச்சேரி கிழக்குப் பகுதி எஸ்.பி.யாக உள்ள ரட்சனா சிங் பெண்களுக்கு எதிரான குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டாா். தீபிகா கிழக்குப் பகுதி எஸ்.பி.யாகவும், விஷ்ணுகுமாா் தெற்குப் பகுதி எஸ்.பி.யாகவும் மாற்றப்பட்டனா்.
காவல் துறை தலைமையக முதுநிலை எஸ்.பி. மகேஷ்குமாா் பா்ன்வால் ஐ.ஆா்.பி.என். கமாண்டன்டாக பணியிட மாற்றம் செய்யப்பட்டாா்.
வயா்லெஸ் பிரிவு எஸ்.பி.யாக உள்ள பாஸ்கரன் லஞ்ச ஒழிப்பு பிரிவு எஸ்.பி. பதவியைக் கூடுதலாக கவனிப்பாா். இதற்கான உத்தரவை புதுவை தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா் சனிக்கிழமை பிறப்பித்தாா்.