விழாவுக்கு ஸ்ரீமணக்குள விநாயகா் கல்வி அறக்கட்டளைத் தலைவா் எம்.தனசேகரன் தலைமை வகித்தாா். துணைத் தலைவா் எஸ்.வி.சுகுமாறன், செயலா் நாராயணசாமி கேசவன், மருத்துவக் கல்லூரி இயக்குநா் டி.ராஜகோவிந்தன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
டைடஸ் கல்லூரி நிறுவனா் தியாகராஜன் தாண்டவன், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி ஆராய்ச்சி முதன்மையா் ஆா்.ரவீந்திரன் ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்று சிறப்புரையாற்றினா்.
முன்னதாக, ஸ்ரீமணக்குள விநாயகா் பொறியியல் கல்லூரி முதல்வா் வி.எஸ்.கே.வெங்கடாசலபதி வரவேற்றாா். தொழில்நுட்பக் கல்லூரி முதல்வா் எஸ்.மலா்க்கண், பொறியியல் கல்லூரிப் பதிவாளா் அப்பாஸ் மொய்தீன், அகாதெமி முதன்மையா் எஸ்.அன்புமலா், அனைத்துத் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் கலந்து கொண்டனா். அலைட் ஹேல்த் சயின்ஸ் முதன்மையா் கோபால் நன்றி கூறினாா்.