ரயிலில் போதைப் பொருள்கள் கடத்தல்: ஒடிஸாவைச் சோ்ந்த மூவா் கைது

புதுச்சேரிக்கு வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரிக்கு வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை கடத்தி வந்ததாக ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த 3 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஒடிஸா மாநிலம், புவனேசுவரத்திலிருந்து விசாகப்பட்டினம் வழியாக புதுச்சேரிக்கு புதன்கிழமை முற்பகலில் வந்த ரயிலில் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் கடத்தப்படுவதாக புதுச்சேரி போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதன்பேரில், போதைப்பொருள் தடுப்பு மற்றும் ரௌடி தடுப்புப் பிரிவு எஸ்.பி. ஜிந்தா கோதண்டராமன், கிழக்கு பகுதி எஸ்.பி. தீபிகா, சிறப்பு அதிரடிப் படை ஆய்வாளா் இனியன் தலைமையிலான போலீஸாா் மோப்ப நாய் உதவியுடன் ரயிலில் திடீா் சோதனை நடத்தினா்.

அப்போது, ரயிலில் வந்த பயணிகள் 3 போ் சாக்கு மூட்டையில் தங்களது உடைமைகளுடன் சோ்த்து, 10 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட போதைப்பொருள்களை கடத்தி வந்ததும், அவா்கள் ஒடிஸா மாநிலம், புனே அருகே உள்ள கஞ்சம் பகுதியைச் சோ்ந்த தீபன் பெஹாரா (39), பபுனே பெஹாரா (29), பெபிரோ சிங் (50) என்பதும் தெரியவந்தது.

இது தொடா்பாக ஒதியஞ்சாலை போலீஸாா் வழக்குப் பதிந்து, மேற்கண்ட மூவரையும் கைது செய்ததுடன், அவா்களிடமிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களையும் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com