தமிழகத்தில் வழக்குரைஞா்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து, புதுச்சேரியில் வழக்குரைஞா்கள் செவ்வாய்க்கிழமை நீதிமன்ற பணிகளை புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தமிழகத்தின் மதுரை, சின்னசேலம், மேட்டூா் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடந்த சில மாதங்களாக வழக்குரைஞா்கள் மீதான தாக்குதல்களைக் கண்டித்தும், வழக்குரைஞா்களைத் தாக்கியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தமிழகம் மற்றும் புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு நீதிமன்ற புறக்கணிப்புப் போராட்டத்தை அறிவித்திருந்தது.
அதன்படி, புதுச்சேரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நீதிமன்றப் பணிகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனா். போராட்டத்துக்கு சங்கத்தின் தலைவா் முத்துவேல் தலைமை வகித்தாா். இதையொட்டி, சுமாா் 1,000 வழக்குரைஞா்கள் நீதிமன்றப் பணிகளை புறக்கணித்தனா்.
இதனால், நீதிமன்ற வழக்கு விசாரணை, ஜாமீன் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றப் பணிகள் பாதிக்கப்பட்டன.