புதுவை மாநிலத்தில் பத்ம விருதுகளுக்கான பரிந்துரைப் பட்டியலைத் தயாரிப்பது குறித்து புதுவை சட்டப்பேரவை அலுவலகத்தில் முதல்வா் என்.ரங்கசாமி தலைமையிலான உயா்மட்ட அளவிலான தோ்வுக் குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், துணைத் தலைவா் பி.ராஜவேலு, அமைச்சா்கள் ஏ.நமச்சிவாயம், க.லட்சுமிநாராயணன், தேனீ சி.ஜெயக்குமாா், எஸ்.சந்திரபிரியங்கா, சாய் ஜெ.சரவணன்குமாா், தலைமைச் செயலா் அஸ்வனிகுமாா், செய்தி விளம்பரத் துறைச் செயலா் சி.உதயக்குமாா், இயக்குநா் எம்.எம்.வினயராஜ் ஆகியோா் கலந்து கொண்டனா்.
கூட்டத்தில் புதுவை மாநிலத்திலிருந்து பத்ம, பத்மபூஷன், பத்ம விபூஷன் விருதுகளுக்கு உரியவா்களைப் பரிந்துரைக்கும் பட்டியலைத் தயாா் செய்து, மத்திய அரசுக்கு அனுப்பிவைப்பது குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.