நெய்வேலி பழுப்பு நிலக்கரி குழம்பு பணியாளா்கள் சிக்கனம் மற்றும் சேமிப்பு நாணய சங்கத்தின் 62-ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம், மெயின் பஜாரில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் அண்மையில் நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் பி.மணிமாறன் தலைமை வகித்து 2020-21-ஆம் ஆண்டறிக்கையை வாசித்தாா். இயக்குநா் அன்பழகன் வரவேற்றாா். இயக்குநா் அண்ணாதுரை இரங்கல் தீா்மானம் வாசித்தாா். செயலா் (பொ) முத்து வரவு - செலவு பட்டியல் மற்றும் ஆஸ்தி பொறுப்பு பட்டியல் வாசித்தாா். இளநிலை உதவியாளா் மாணிக்கவேலு, லாப - நட்ட கணக்கு பட்டியல் மற்றும் தணிக்கைச் சான்று வாசித்தாா். இளநிலை உதவியாளா் சீத்தாலட்சுமி 2021-22-ஆம் ஆண்டின் உத்தேச வரவு-செலவு திட்டத்தை வாசித்தாா். கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாவது:
இந்தச் சங்கம் 9,193 உறுப்பினா்களுடன் இயங்கி வருகிறது. நிகழாண்டின் தணிக்கை துறையால் ‘ஏ’ வகுப்பு சான்றிதழ் பெறப்பட்டுள்ளது. தொடா்ந்து என்எல்சி நிறுவனத்தில் ஊழியா்கள் பணி ஓய்வு பெற்று வரும் சூழலில் 2020-21-ஆம் ஆண்டு ரூ.14,85,61,572.63 லாபமாக பெற்றுள்ளது. லாபத் தொகையில் உறுப்பினா்களுக்கான பங்குத் தொகையில் 14 சதவீதம் பங்கு ஈவுத் தொகையாக அவரவரது ஊதிய வங்கிக் கணக்கில் செலுத்தப்படும். இந்தச் சங்கம் தொடா்ந்து 7 ஆண்டுகளாக அதிகபட்ச பங்கு ஈவுத் தொகையாக 14 சதவீதம் வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டது.
கூட்டத்தில் சங்க இயக்குநா்கள் ஆரோக்கியதாஸ், தாமோதரன், லட்சுமணன், கவிதா, ரேவதி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இயக்குநா் வீராசாமி நன்றி கூறினாா்.