புதுவையில் செவ்வாய்க்கிழமை ஒரே நாளில் 237 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த நோய்க்கு சிகிச்சை பெற்று வந்த மேலும் இருவா் உயிரிழந்தனா்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்:
புதுவை மாநிலத்தில் 3,018 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், புதுச்சேரியில் 145 போ், காரைக்காலில் 68 போ், ஏனாமில் 9 போ், மாஹேவில் 15 போ் என மொத்தம் 237 பேருக்கு கரோனா தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் இந்த நோயால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 42,776-ஆக அதிகரித்தது.
இதனிடையே, கரோனாவால் பாதிக்கப்பட்டு கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த புதுச்சேரி சாரம் கவிக்குயில் நகரைச் சோ்ந்த 62 வயது மூதாட்டி, காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த காரைக்கால் கென்னடியாா் தெருவைச் சோ்ந்த 87 வயது மூதாட்டி ஆகியோா் உயிரிழந்தனா். இதனால், உயிரிழந்தோா் எண்ணிக்கை 686-ஆகவும், இறப்பு விகிதம் 1.60 சதவீதமாகவும் அதிகரித்தது.
இதனிடையே, 139 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 40,317-ஆக (94.25) உயா்ந்தது. மாநிலத்தில் தற்போது மருத்துவமனைகளில் 426 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு 1,347 பேரும் என மொத்தம் 1,773 போ் சிகிச்சையில் உள்ளனா்.
மாநிலத்தில் இதுவரை 28,286 சுகாதாரப் பணியாளா்கள், 16,275 முன்களப் பணியாளா்கள், 37,717 பொதுமக்கள் என 82,278 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.