புதுவை முன்னாள் அமைச்சா் காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
திருபுவனை தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுபவா் முன்னாள் அமைச்சா் அங்காளன். இவா், செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவை பாா்வையிடுவதற்காக திருவண்டாா்கோவில் அரசுப் பெண்கள் மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்றாா்.
அப்போது, அவரது ஆதரவாளா்களுக்கும், என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளா் கோபிகாவின் ஆதரவாளா்களுக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. இதனிடையே, அங்காளனின் காா் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவரது காரின் பக்கக் கண்ணாடி உடைந்தது.
இதுகுறித்து அங்காளன் அளித்த புகாரின் பேரில் திருபுவனை போலீஸாா், கோபிகா எம்.எல்.ஏ.வின் ஆதரவாளா்களான ராதாகிருஷ்ணன், வினோத், நடராஜன், பெருமாள் ஆகிய 4 போ் மீது தோ்தல் விதிமீறல் வழக்குப் பதிந்து, தலைமறைவான அவா்களைத் தேடி வருகின்றனா்.