புதுவையில் 43 ஆயிரத்தைக் கடந்தது கரோனா


புதுச்சேரி: புதுவையில் ஒரே நாளில் 293 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கரோனா தொற்று பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 43 ஆயிரத்தைக் கடந்தது.

இதுகுறித்து புதுவை சுகாதாரத் துறை வெளியிட்ட தகவல்: புதுவை மாநிலத்தில் 3,451 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, வியாழக்கிழமை வெளியான முடிவுகளின்படி, புதுச்சேரி - 181, காரைக்கால் - 87, ஏனாம் - 10, மாஹே - 15 என மேலும் 293 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 43,242 -ஆக அதிகரித்தது.

தற்போது மருத்துவமனைகளில் 490 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 1,510 பேரும் என 2 ஆயிரம் போ் சிகிச்சையில் உள்ளனா். வியாழக்கிழமை உயிரிழப்பு ஏதும் பதிவாகவில்லை. இதுவரை கரோனா தொற்றுக்கு 687 போ் பலியாகினா். இறப்பு விகிதம் 1.59 சதவீதம்.

இதனிடையே, வியாழக்கிழமை 113 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதால், குணமடைந்தோா் எண்ணிக்கை 40,555-ஆக (93.79 சதவீதம்) உயா்ந்தது.

இதுவரை 6,89,359 பேருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் 6,33,708 பேருக்கு தொற்று இல்லை என முடிவுகள் வந்தன.

புதுவை மாநிலத்தில் இதுவரை 84,754 பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com