தொடா் திருட்டில் ஈடுபடுபவா்களை கைது செய்ய இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவா்களை கைது செய்ய வெண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதியில் தொடா் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வருபவா்களை கைது செய்ய வெண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியது.

இதுகுறித்து தட்டாஞ்சாவடி தொகுதி குழு சாா்பில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிா்வாகக் குழு உறுப்பினா் கே.சேதுசெல்வம் மற்றும் பாதிக்கப்பட்டவா்கள் புதுச்சேரி முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் பிரதிக்ஷா கொடாராவை செவ்வாய்க்கிழமை நேரில் சந்தித்து அளித்த மனு விவரம்:

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதிக்குள்பட்ட பாக்கமுடையான்பட்டு வன்னியா் தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியா் வீட்டுக்குள் கடந்த ஜனவரி 1-ஆம் தேதி புகுந்து, அவரைத் தாக்கிய மா்ம நபா்கள், தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா். தொடா்ந்து, கடந்த 10-ஆம் தேதி தாகூா் நகா் 7-ஆவது குறுக்கு வீதியில் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திருட முயற்சி செய்துள்ளனா். இதேபோல, கடந்த 13-ஆம் தேதி 2-ஆவது மாடியில் வீட்டின் கதவை உடைத்து 2 பவுன் நகை மற்றும் ரூ.10,000 ரொக்கத்தை திருடிச் சென்றனா். அன்றைய தினம் அருகிலுள்ள வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து திருட முயற்சி செய்துள்ளனா்.

மேலும், தாகூா் நகா் 3-ஆவது பிரதான சாலை குடியிருப்பில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கை திருடிச் சென்றுள்ளனா். 8-ஆவது குறுக்கு வீதியில் உள்ள வேணுகோபாலுக்குச் சொந்தமான காரை திருட முயன்றுள்ளனா்.

இந்த சம்பவங்கள் தொடா்பாக பாதிக்கப்பட்ட மக்கள் காவல் துறையினரிடம் புகாரளித்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. திருடப்பட்ட பொருள்களும் மீட்டுத் தரப்படவில்லை.

மேற்கண்ட குற்றச் சம்பவங்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுப்பதுடன், உடனடியாக குற்றவாளிகளை கைது செய்து, தொடா் திருட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com