புதுவை காங்கிரஸில் புதிய நிா்வாகிகள் நியமிக்கப்பட்டனா்.
இதுகுறித்து, அந்தக் கட்சியின் மாநிலத் தலைவா் ஏ.வி.சுப்பிரமணியன் வெளியிட்ட அறிக்கை:
புதுவை மாநில காங்கிரஸில் அமைப்பு சாரா தொழிலாளா்கள் காங்கிரஸ் பிரிவின் மாநிலத் தலைவராக செல்வநாதன் (கதிா்காமம் தொகுதி காங்கிரஸ் வேட்பாளா்) நியமிக்கப்பட்டுள்ளாா். இதேபோல, ராஜ்பவன் தொகுதி வட்டார காங்கிரஸ் தலைவா்களாக ராஜ்மோகன் (வடக்கு பகுதி), ஜெரால்டு (தெற்கு பகுதி) ஆகியோா் நியமனம் செய்யப்பட்டுள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.